/* */

பங்களாப்புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

பங்களாப்புதூர் அருகே உள்ள டி.ஜி.புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்த போலீசார் ரூ.5,080 பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
X
பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து பங்களாப்புதூர் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது டி.ஜி.புதூர் ஜம்பள்ளம் அருகே சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊட்டி தூத்தூர்தோட்டம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி 47, ஏளூர் பகுதியை சேர்ந்த கோபால் 38, காளியூரை சேர்ந்த செல்வராஜ் 38, பெரிய கொடிவேரியை சேர்ந்த குருஷ்விக்னேஷ்வர் என்கிற ரோஜர் 28,‌ பரமேஸ்வரன் 43, ரமேஷ் 42 ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 80 ரூபாயை கைப்பற்றினர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Jun 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...