/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 447 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று வரை 274 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 447 பேர் வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கடந்த 28 ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள் உட்பட அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து ஈரோடு மாநகராட்சியில் நேற்று 1-2-2022 வரை 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று 2-2-2022-ம் தேதி 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 26 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் போட்டியிட நேற்று வரை 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் இன்று மட்டும் 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் இதுவரை மொத்தம் 82 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் போட்டியிட நேற்று வரை 124 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இன்று மட்டும் 215 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் போட்டியிட இதுவரை 339 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 447 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Updated On: 2 Feb 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!