/* */

கோபி அருகே நடைபாதை தகராறில் ஒருவருக்கு கத்தி‌குத்து: 3 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே நடைபாதை தொடர்பான தகராறில் தாய், மகனை தாக்கி கத்தியால் குத்திய 3 பேர் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபி அருகே நடைபாதை தகராறில் ஒருவருக்கு கத்தி‌குத்து: 3 பேர் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் நடைபாதை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதனையடுத்து, நேற்று மீண்டும் தகராறு ஏற்படவே, ஆனந்தன், அவரது தந்தை தங்கமணி மற்றும் தாயார் ருக்குமணி ஆகியோர் லிங்கேஸ்வரனை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனை தடுக்க வந்த லிங்கேஸ்வரனின் தாயார் கண்ணம்மாள் என்பவரையும் அடித்துள்ளனர். பின்னர், படுகாயமடைந்த லிங்கேஸ்வரன் மற்றும் அவரது தாயார் கண்ணம்மாள் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, கடத்தூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 April 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’