அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.2.86 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை

X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |23 May 2022 7:30 PM IST
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில், 8,401 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 4 ரூபாய் 07 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 15 ரூபாய் 17 பைசாவிற்கும்,18 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 740 ரூபாய் 89 பைசா முதல் 81 ரூபாய் 69 பைசாவிற்கும் விற்பனையானது.
மேலும், 19 மூட்டைகள் எள் கிலோ 107 ரூபாய் 79 பைசாவிற்கும், 4 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ 21 ரூபாய் 69 பைசாவிற்கும் விற்பனையானது.
இன்றைய வர்த்தகத்தில், மொத்தம் 74.79 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 2 லட்சத்து 27 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu