/* */

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 2 வீடுகள் சேதம்

Wild Elephant - அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் காட்டு யானை உணவு தேடி வந்தபோது தாக்கியதில் இரு வீடுகள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 2 வீடுகள் சேதம்
X

யானை தாக்கியதில் சேதமடைந்த வீடுகள்.

Wild Elephant - ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம், பர்கூர் ஊராட்சி, மேல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி மாதம்மாள் (65). இவரது மகன் முனியப்பன், தனது மகளுடன் அருகாமையில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை இவர்களின் வசிப்பிடத்துக்கு காட்டுயானை உணவு தேடி வந்துள்ளது.


அப்போது, நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு இவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது தெரியவந்தது.உணவு தேடி வந்த காட்டுயானை இவர்களின் வீட்டை சேதப்படுத்திவிட்டுச் சென்றது. இதுகுறித்த தகவலின்பேரில் பர்கூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். உணவு தேடி காட்டுயானை குடியிருப்புக்கு வந்து செல்வது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Jun 2022 10:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!