/* */

சித்தோட்டில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சித்தோட்டில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட மனோஜ்,  தாலிப்ராஜா.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம் பிரிவு, காளிங்கராயன் பாளையம், நசியனூர் உள்ளிட்ட இடங்களில் பெண்களிடம் நகை நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் லட்சுமி நகரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சந்தேகத்துக்குரிய வகையில் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தியதில், கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த மனோஜ் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த தாலிப்ராஜா ஆகிய இருவரும் கோவை சிறையில் நண்பர்களாகி தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகள் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இருவரிடமும் இருந்து 11 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்து நகை பறிப்பு சம்பவத்திற்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 Jun 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு