கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

மினி லாரியில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்த போது எடுத்த படம்.
கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூரில் போலீஸ் நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பெரியசாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்தது. அந்த மினிலாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மினிலாரியில் முட்டைகோஸ் மூட்டைகளுக்குள் வேறு சில மூட்டைகளும் இருந்தன.
இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தது. மொத்தம் 70 மூட்டைகளில் 1.5 டன் புகையிலை பொருட்கள் இருந்தன.
இதையடுத்து, மினிலாரியை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 29), என்பதும், கர்நாடக மாநிலம் சிக்கொலா பகுதியில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு புகையிலை பொருட் களை விற்பதற்காக கடத்தி வந்ததும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து, போலீசார் மினிலாரியுடன் 1.5 டன் புகையிலை பொருட்களையும் பறி முதல் செய்து, பாலசுப்பிரமணியத்தையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu