கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
X

மினி லாரியில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்த போது எடுத்த படம்.

கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூரில் போலீஸ் நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பெரியசாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்தது. அந்த மினிலாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மினிலாரியில் முட்டைகோஸ் மூட்டைகளுக்குள் வேறு சில மூட்டைகளும் இருந்தன.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தது. மொத்தம் 70 மூட்டைகளில் 1.5 டன் புகையிலை பொருட்கள் இருந்தன.

இதையடுத்து, மினிலாரியை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 29), என்பதும், கர்நாடக மாநிலம் சிக்கொலா பகுதியில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு புகையிலை பொருட் களை விற்பதற்காக கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் மினிலாரியுடன் 1.5 டன் புகையிலை பொருட்களையும் பறி முதல் செய்து, பாலசுப்பிரமணியத்தையும் கைது செய்தனர்.

Next Story
Similar Posts
கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
ஈரோடு திண்டலில் முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
ஈரோட்டில் அரசு அதிகாரியின் பெயரில் போலி கடிதம் தயாரித்து பள்ளிகளில் குறும்படம் காண்பித்து பணம் வசூல்: 3 பேர் கைது
கோபி அருகே வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு
ஈரோடு: மொடக்குறிச்சி அருகே சாமிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம் ரூ.13 ஆயிரத்துக்கு ஏலம்
உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு!..தீயணைப்பு வீரர்கள் மீட்பு
கோபி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம்  5 பவுன் நகை பறிப்பு
ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது!
புன்செய்புளியம்பட்டியில் மரக் கைவினை பொருள்கள் பயிற்சி நிறைவுவிழா..!
மகா சிவராத்திரி: சத்தியமங்கலம் அருகே 1 லட்சம் சிவலிங்கங்களுக்கு சிறப்பு பூஜை
சாலையோரம் நின்று கொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் 5 போ் காயம்
கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி