/* */

அந்தியூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி மாயம்

அந்தியூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி மாயம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கிடுசாமி. இவரது மனைவி சுசிலா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பூமணி (வயது 16). இவர் அந்தியூர் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கோபி அருகே உள்ள கூகலூரில் உள்ள சுசிலாவின் உறவினர் வீட்டில் பூமணியை விட்டு விட்டு வெங்கிடுசாமி மற்றும் அவரது மனைவி சுசிலா இருவரும் வெளியூர் சென்றனர்.

இந்நிலையில் பூமணி வெளியே சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து அவரது தாய் சுசிலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் பூமணி பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து சுசிலா தனது மகளை காணவில்லை என கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...