/* */

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

HIGHLIGHTS

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி ஏலம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த ஏலத்திற்கு அந்தியூர், அத்தாணி, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், சென்னம்பட்டி, ஆப்பக்கூடல், கோவிலூர், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,735 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

மொத்தம் 1,396.92 குவிண்டால் பருத்தி, குறைந்தபட்ச விலையாக 68 ரூபாய் 19 பைசாவிற்கும் அதிகபட்ச விலையாக 101 ரூபாய் 59 பைசாவிற்கும் விற்பனையானது.நேற்றைய வர்த்தகத்தில் மொத்தம் 1 கோடியே 18 லட்சத்து 21 ஆயிரத்து 681 ரூபாய்க்கு ஏலம் போனதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 29 Jun 2022 6:00 AM GMT

Related News