அந்தியூரில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஒப்பாரி போராட்டம்!

அந்தியூரில் கூலி கேட்டு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை.
எனவே, 5 மாத கூலி கேட்டு நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க அந்தியூர் கிளை சார்பில் அந்தியூர் கனரா வங்கி முன்பு ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம் நடந்தது. இதில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 5 மாதங்கள் கூலி வழங்காததை கண்டித்து தொழிலாளர் கள் ஒப்பாரி வைத்தனர்.
இந்த போராட்டத்தில் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்பாளையம், பிரம்மதேசம், நகலூர், சின்னத்தம்பிபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu