செம்பட்டி அருகே காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது

செம்பட்டி அருகே காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது
X

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே காரில் கடத்திய 220 கிலோ குட்கா பறிமுதல் செய்ததுடன் , 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 220 கிலோ குட்கா மற்றும் காரை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே காரில் கடத்திய 220 கிலோ குட்கா பறிமுதல் செய்ததுடன் , 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா செம்பட்டி வழியாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் காரில் கடத்துவதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்படி , தனிப்படை சார்பு ஆய்வாளர் சேக்தாவூத் மற்றும் காவலர்கள் நடத்திய அதிரடி வாகன சோதனையில், காரில் குட்கா கடத்திய கம்பத்தை சேர்ந்த வெங்கடேசன்(56), சுல்தான்(37) பைசூல் ரகுமான்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 220 கிலோ குட்கா மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து செம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, செம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி. சீனிவாசன் செம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து விசாரணை செய்தார்.

Tags

Next Story
ai solutions for small business