திண்டுக்கல் அருகே தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர்

திண்டுக்கல் அருகே தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி.

திண்டுக்கல் அருகே தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. படித்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்புவிடுத்துள்ளார்.

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிறப்புத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வேடசந்தூர், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4ம் தேதி அன்று நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்

திண்டுக்கல்:

டாக்டர் கலைஞர், நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிறப்புத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 04.11.2023 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலை நாடுநபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த இளைஞர்கள் பங்கேற்று தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பினை பெற்று பயனடையலாம்.

விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமை அடையாள அட்டை, சுய விவரக் குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நகலுடன் பங்கேற்கலாம். மேலும், இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story