/* */

குடும்ப அட்டை வழங்கக்கோரி பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு AAY குடும்ப அட்டை வழங்கக்கோரி போராட்டம்.

HIGHLIGHTS

குடும்ப அட்டை வழங்கக்கோரி பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
X

பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஏஏஒய் ரேஷன் கார்டு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இணைத்து கொள்வது என்ற திட்டத்தின் அடிப்படையில், மத்திய அரசின் நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அலுவலக குறிப்புபடி, மாற்றுத்திறனாளிகளை வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்களாக ஏற்க வேண்டும். இதனடிப்படையில் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசும் NPHH மற்றும் PHH ரேஷன் கார்டுகளை மாற்றி AAY குடும்ப கார்டுகளாக மாற்றி ,மாதந்தோறும் 35 கிலோ அரிசியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தர்மபுரி மாவட்டம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக இன்று பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அந்தியோதயா அன்ன யோஜனா மத்திய அரசின் திட்டப்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு AAY குடும்ப அட்டை வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உறுப்பினர்களுக்கான சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.



Updated On: 18 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!