/* */

தர்மபுரி அருகே வடமாநில இளைஞர் கொலை: போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே வடமாநில இளைஞர் கொலை: போலீசார் விசாரணை
X

பாபாய்.

தர்மபுரியை அடுத்துள்ள குண்டல்பட்டி அருகேயுள்ள மாரவாடி சாலையில் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த பாபாய் (வயது20), ஆதித்யா சவுத்ரி (40) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் அருகில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆதித்யாசவுத்ரி சம்மட்டியை எடுத்து பாபாயை தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கொலை செய்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பாபாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஆதித்யா சவுத்ரியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 8 March 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  2. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  3. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  5. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  6. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  7. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  8. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
  10. லைஃப்ஸ்டைல்
    வட துருவ ஒளியின் மாயாஜாலம்!