Begin typing your search above and press return to search.
கடத்தூர் அருகே பைக் மோதி கூலித்தொழிலாளி பலி
கடத்தூர் அருகே பைக் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள டில்லியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் வயது, 45. கூலி தொழிலாளி .இவர் நேற்று முன்தினம் இரவு 9மணியளவில் சுங்கரஹள்ளியில் இருந்து சில்லாரஹள்ளிக்கு தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் பள்ளி அருகே வரும்போது, எதிரே கடத்தூரில் இருந்து பொம்மிடி நோக்கி சென்ற ரேகடஹள்ளியை சேர்ந்த மதன்ராஜ், 25.என்பவர் தனது பைக்கில் வந்து மோதியதில் சைக்கிளில் வந்த செந்தில்குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கடத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.புகாரின்படி கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.