/* */

கடத்தூர் பேரூராட்சியில் கால்வாய் சீரமைப்பு பணியை ஆய்வு செய்த அதிகாரி

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஏரிக்கு நீர் வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

கடத்தூர் பேரூராட்சியில் கால்வாய் சீரமைப்பு பணியை ஆய்வு செய்த அதிகாரி
X

கடத்தூர் பேரூராட்சியில், ஆய்வின் போது, தர்மபுரி மண்டல உதவி இயக்குனர் கண்ணன் மரக்கன்று நட்டார்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சியில், மின்வாரிய அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஏரி, சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு மழை பெய்தால் பொதியன்பள்ளத்தில் இருந்து தண்ணீர் வரும். இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்க்கும், விவசாயத்திற்க்கும், ஏரி நீர் பயனாக அமைகிறது.

ஆனால் தண்ணீர் வரும் வழி, முழுமையாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர, தேசிய பசுமை தீர்பாய திட்டத்தின் கீழ், கால்வாய் சீரமைப்பு பணி மேற்கொள்வதற்காக தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர், பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்து, அனைத்து வார்டுகளிலும் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார், இன்ஜினியர்கள் முருகன், ராஜா உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jun 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...