/* */

மரவள்ளியை பூஞ்சை,செம்பேன் தாக்குதல்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மரவள்ளியை பூஞ்சை, செம்பேன் தாக்கியதால் நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மரவள்ளியை பூஞ்சை,செம்பேன் தாக்குதல்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

நோயினால் பாதிக்கப்பட்ட பயிரினை கவலையுடன் காட்டும் விவசாயிகள்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பொம்மிடி, கடத்தூர், பி.பள்ளிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஓராண்டு கால பயிரான மரவள்ளி தற்போது சாகுபடி செய்யப்பட்டு, ஆறு மாத காலம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மரவள்ளி கிழங்கு செடி தற்பொழுது கிழங்கு வைக்கும் நிலையில், செடிகளை முழுவதும் செம்பேன், வெள்ளை பூஞ்சை போன்ற நோய்கள் தாக்கி வருகிறது. இதனால் செடிகள் வளராமல் அழுகும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு இந்த வெள்ளை பூஞ்சை நோய் பரவி, சாகுபடி செய்துள்ள மொத்த பயிர்களையும் அழித்து வருகிறது. இதனால் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.ஒரு ஏக்கருக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இந்த நஷ்டஈட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 19 Aug 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  6. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  10. வீடியோ
    பத்திரிக்கையாளர்கள் மீது தொடங்கும் போர் ! Redpix Felix பகீர்...