/* */

வாலிபர் சாவில் மர்மம்..! -உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

பாலக்கோடு அருகே வாலிபர் சாவில் மர்மம், உடலை தோண்டி எடுத்து பரிசோதனை.

HIGHLIGHTS

வாலிபர் சாவில் மர்மம்..! -உடலை தோண்டி எடுத்து பரிசோதனை
X

தர்மபுரி மாவட்டம் கும்மனூர் அருகே உள்ள பசிகம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (37) இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார், இவரது மனைவி வைத்தீஸ்வரி (30) இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதே ஊரைச் சேர்ந்த பாண்டியனின் நண்பர்களான முரளி, சுந்தரம், முனுசாமி, இவர்கள் 4 பேரும் ஒன்றாக ஓசுர், இராயக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு ஒன்றாக வேலைக்கு சென்று வருவது வழக்கம் பாண்டியனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் இனி குடிக்க கூடாது என அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் வேலைக்கு சென்று நண்பர்களுடன் குடித்துவிட்டு வந்ததால் கடந்த 30ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டு அலறி துடித்த பாண்டியனை மாரண்டஅள்ளி தனியார் ஆஸ்பத்திரியல் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாண்டியன் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் பசிகம் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் பாண்டியனின் மனைவி அவரது செல்போனை எடுத்து பார்த்த போது முரளி, சுந்தரம் ஆகியோருடன் பாண்டியன் பேசிய ஆடியோ பதிவாகியிருந்தது அதில் 3 பேருக்கும் பணம் சம்மந்தமாக வாய்த் தகராறு ஏற்பட்டிருந்தது ஆடியோ மூலம் தெரிய வந்தது.

இதனால் பணத்திற்காக முரளி, சுந்தரம் ஆகியோர் தனது கணவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புதைக்கபட்ட பாண்டியன் உடலை நேற்று தோண்டி எடுத்து அதே இடத்தில் பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் ஆகியோர் முன்னிலையில் தர்மபுரி அரசு மருத்துவர் மதன்ராஜ் பிரேத பரிசோதனை செய்து மாதிரிகளை எடுத்து சென்றார், பின்னர் பாண்டியன் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இறந்தவர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 4 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?