/* */

வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

காளப்பனஹள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் மேற்பார்வையில் தர்மபுரி, தொப்பூர், அதியமான் கோட்டை, மதிகோன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கஞ்சா, குட்கா ஒழிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வத்தல்மலை அடிவாரத்தில் தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்

அப்போது ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் காரிமங்கலம் அடுத்த மார்க்கம்பட்டி காளப்பனஹள்ளியை சேர்ந்த சேகர் என்கின்ற ராஜசேகர் என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கி வந்ததாக கூறினார். இதனை அடுத்து போலீசார் அதிரடியாக அவரது வீட்டை சோதனை செய்து சுமார் 500 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை அதியமான்கோட்டை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 31 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி