மாரண்டஅள்ளி அருகே சூதாடிய 2 பேர் கைது: 5 டூவிலர்கள் பறிமுதல்

மாரண்டஅள்ளி அருகே சூதாடிய 2 பேர் கைது: 5 டூவிலர்கள் பறிமுதல்
X
மாரண்டஅள்ளி அருகே சூதாடிய 2 பேர் கைது, 5 டூவிலர்கள் பறிமுதல்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதுரில் சூதாட்டம் நடப்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாந்தோப்பில் 5 பேர் சூதாடுவது தெரிய வந்தது, போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அதில் அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது .47), மற்றும் வெங்கடாசலம் (வயது. 46) ஆகிய இருவர் மட்டுமே போலீசாரிடம் பிடிபட்டனர். மேலும் 3200 ரூபாய் பணமும், 5 மோட்டார் சைக்கிள் களையும் பறிமுதல் செய்த மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story