மாரண்டஅள்ளி அருகே சூதாடிய 2 பேர் கைது: 5 டூவிலர்கள் பறிமுதல்

X
By - Ananthan, Reporter |2 Dec 2021 9:45 PM IST
மாரண்டஅள்ளி அருகே சூதாடிய 2 பேர் கைது, 5 டூவிலர்கள் பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதுரில் சூதாட்டம் நடப்பதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாந்தோப்பில் 5 பேர் சூதாடுவது தெரிய வந்தது, போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அதில் அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது .47), மற்றும் வெங்கடாசலம் (வயது. 46) ஆகிய இருவர் மட்டுமே போலீசாரிடம் பிடிபட்டனர். மேலும் 3200 ரூபாய் பணமும், 5 மோட்டார் சைக்கிள் களையும் பறிமுதல் செய்த மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu