/* */

காரிமங்கலத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது: 2 பேர் கைது

காரிமங்கலம் அருகே வாகன சோதனையில், லாரியில் கடத்தப்பட்ட 10½ டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

காரிமங்கலத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது:  2 பேர் கைது
X

குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவுபடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, முரளி மற்றும் போலீசார், தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் காரிமங்கலம் அருகே வாகனச்சோதனை நடத்தினார்கள்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரியில் சோதனை செய்தபோது, அதில் சுமார் 10.5 டன் எடைகொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை சேலத்தில் இருந்து பெங்களூருக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியில் சிக்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, வேனில் வந்த ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது37), விஜயகுமார் (30) ஆகிய 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 30 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...