/* */

அரூர் அருகே பெண் அடித்துக் கொலை: 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

அரூர் அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூர் அருகே பெண் அடித்துக் கொலை: 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வெளாம்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் வயது 41, இவரது மனைவி ராதாமணி, வயது 35, தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சித்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்த ராதாமணி கடந்த ஏப்ரல் 6ந் தேதி இரவு தேர்தல் பணிக்கு சென்றுவிட்டு கணவரின் பைக்கில் வந்த போது வெளாம்பள்ளி காட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பேரேரியை சேர்ந்த அவரது தந்தை கோவிந்தன், அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சம்பவ நடந்த நாளான்று மயங்கி விழுந்த ராதாமணியை அவரது கணவர் வெங்கட்ராமன், நாகம்மாள்,ஜடையன், ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், இதனை அந்த வழியாக வந்த செல்வம் என்பவர் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்தபோது, சாதாரண மயக்கம் தான் உடனே எழுந்து விடுவார் என மூவரும் கூறியுள்ளனர். பின்னர் ராதாமணி உயிரிழந்தார்.

அக்கம்பக்கம் விசாரித்ததில், ராதாமணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை வெங்கட்ராமன் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், சம்பவ நாளன்று வெங்கட்ராமன் உள்ளிட்ட மூன்று பேரும் ராதாமணியை அடித்து கழுத்தை நெருக்கி கொலை செய்ததாக கூறியுள்ளார். நீதிமன்ற பரிந்துரைப்படி, அரூர் போலீசார் வெங்கட்ராமன், நாகம்மாள், ஜடையன் மூன்று பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

Updated On: 16 Sep 2021 2:27 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்