/* */

இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம்: வனத்துறையினர் எச்சரிக்கை

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் சாமனூர், படகாண்ட அள்ளி, கொக்கிகல் பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம்: வனத்துறையினர் எச்சரிக்கை
X

சிறுத்தை நடமாட்டம் குறித்து கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் அதிகபடியாக உள்ளது. அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமத்திற்குள் யானை, மான், சிறுத்தை, காட்டு பன்றி உள்ளிட்டவைகள் வந்து பயிர்களையும், கால்நடைகளையும் சேதப்படுத்துவது வழக்கம். வனத்துறையினர் அவ்வாறு வரும் விலங்குகளை வனத்திற்குள் விரட்டி அடித்து வருகின்றனர்.

மாரண்டஅள்ளி அடுத்த மலைப்பகுதியை ஒட்டி சாமனூர், படகாண்டஅள்ளி, கொக்கிகல் கிராமங்கள் உள்ளது. கிராமத்தில் மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு ஒன்று நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணிகளை கடித்து வந்தது. திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்தை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து பார்த்துள்ளனர். அதனை உற்று பார்த்த போது அது சிறுத்தை என தெரியவந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதும் செல்போனில் பதிவான காட்சிகள் குறித்து தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து சாமனூர், படகாண்ட அள்ளி, கொக்கிகல் பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள கொக்கிகல், சாமனூர், படகாண்டஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் ஒலி பெருக்கி மூலம் விடுத்த எச்சரிக்கையில், வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சிறுத்தையால் வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும். பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவது, உபாதைகள் கழிப்பதற்காக வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது, கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்க வேண்டும் என்று கூறினர்.

அதேபோல் வனவிலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சார வேலிகள் அமைப்பது, நாட்டு வெடிகுண்டுகள் வைப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

அப்போது வனத்துறையினரிடம் கிராமத்திற்குள் இதுவரை சிறுத்தை வரவில்லை எனவும் எந்த கால்நடைகளையும் இதுவரை சேதப்படுத்தவில்லை கிராமத்தை ஒட்டி சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அச்சமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Updated On: 1 Nov 2023 2:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?