/* */

அரூர் அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது.

HIGHLIGHTS

அரூர் அரசு கல்லூரியில்  மாணவ, மாணவிகளுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்
X

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது.

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா திட்ட விளக்கவுரையாற்றி, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்வது மற்றும் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும் மாணவ மாணவிகளுக்கு ஊக்குவித்தார். கல்லூரியின் முதல்வர் (பொ) ஜெ.சக்திகுமார் வரவேற்புரையாற்றினார்.

மேலும், தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் புள்ளியியல் ஆய்வாளர் பூங்கோதை சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இந்தியன் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆர்.அரவிந்தகுமார் ங்கியின் வேலைவாய்ப்பு மற்றும் கடன் உதவி பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 2021-22ம் ஆண்டிற்கான கண்காட்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வழிகாட்டு கையேடு வெளியிடப்பட்டது.

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக கண்காட்சியில் அமைக்கப்பட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் வரைப்படங்களை பார்வையிட்டனர்.

இறுதியில் கல்லூரியின் உதவி பேராசிரியர் கலைவாணி நன்றியுரை கூறினார்.

Updated On: 11 March 2022 2:24 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ரெமல்' புயலாக...
  2. Trending Today News
    ஓடும் லாரியில் துணிச்சல் திருட்டு..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  4. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  5. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  6. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  7. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...