/* */

தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது

குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

HIGHLIGHTS

தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது
X

ரேசன் அரிசி கடத்தியதாக கைதுசெய்யப்பட்ட காதர். 

தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், எஸ்எஸ் ஐ ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் செந்தில்குமார் வேணுகோபால் முதல் நிலை காவலர் குமார் ஆகியோர் தர்மபுரி கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்தில் இருந்தபோது தர்மபுரி குள்ளனூர் சேர்ந்த பாபு என்பவரின் மகன் காதர் வயது 38 என்பவர், தலா 50 கிலோ எடையுள்ள 22 மூட்டைகளில் மொத்தம் சுமார் 1100 கிலோ ரேஷன் அரிசியை டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தினார். இதனையடுத்து காதர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 25 May 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்