/* */

தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள்

தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதிகளில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி, அங்கக வேளாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

மாவட்ட அளவில் மானாவாரி பகுதிகளில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறும் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 15000/- 2-ம் பரிசு ரூ. 10000/- 3-ம் பரிசு ரூ. 5000/- என வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1.00000/- 2-ம் பரிசு ரூ. 60.000/- 3-ம் பரிசு ரூ. 40.000/- என வழங்கப்பட உள்ளது.

எனவே சிறந்த விவசாயிகளுக்கான பரிசு பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மாநில அளவில் விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ. 100/- செலுத்த வேண்டும். மாவட்ட அளவில் விண்ணப்ப பதிவு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. வரும் 25ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ச திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 18 March 2022 1:58 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...