/* */

வால்பாறையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க கோரிக்கை

வால்பாறை மக்கள் கொரோனா சிகிச்சைக்காக பொள்ளாச்சி அல்லது கோவைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

HIGHLIGHTS

வால்பாறையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க கோரிக்கை
X

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. வால்பாறை பகுதியிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்டப் பணியாளர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், பொள்ளாச்சி அல்லது கோவைக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வால்பாறையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வால்பாறை அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. இதனால் கொரோனா நோயாளிகள் 64 கிலோ மீட்டரில் உள்ள பொள்ளாச்சிக்கும், 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவைக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வால்பாறையில் கொரோனா தொற்று பரவி வருவதால், வால்பாறை அரசு கல்லூரியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 May 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை