/* */

வால்பாறையில் கஞ்சா விற்ற பெண் கைது

1.300 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் 79 ஆயிரம் சிக்கியது.

HIGHLIGHTS

வால்பாறையில் கஞ்சா விற்ற பெண் கைது
X

கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகரில் வசித்து வரும் முத்துலட்சுமி. 43 வயதான இவர், அப்பகுதியில் தன்னுடைய மூன்று மகள்களுடன் வசித்து வந்துள்ளார். தற்போது மழையின் காரணமாக அவருடைய வீடு இடிந்த உள்ளதாக தெரிகிறது. காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் 3 சென்ட் நிலத்தில் செட் அடித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் வருவாய்த்துறை வட்டாட்சியர் ராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ். இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீட்டில் கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் வால்பாறை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது, 1.300 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் 79 ஆயிரம் சிக்கியது. இதையடுத்து முத்துலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இவருடைய கணவர் கஞ்சா விற்பனையில் பல முறை சிறை சென்றது தெரியவந்துள்ளது. தற்போது அவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jun 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  7. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  8. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  9. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  10. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!