/* */

வால்பாறையில் உடல்நலக்குறைவால் குட்டி யானை உயிரிழப்பு

உடல் நலக்குறைவால் உணவு உட்கொள்ளாமல் இருந்த நிலையில் ஆண் குட்டி யானை உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது.

HIGHLIGHTS

வால்பாறையில் உடல்நலக்குறைவால் குட்டி யானை உயிரிழப்பு
X

உயிரிழந்த குட்டி யானை.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் நடமாடி வருகிறது. இந்நிலையில் இரண்டு வயதுள்ள குட்டியானை ஒன்று தோணிமுடி எஸ்டேட் இரண்டாவது பிரிவில் உள்ள ஃபீல்டு எண் 48 ல் நேற்று உடல்நலக்குறைவால் எழுந்து நடமாட முடியாத நிலையில் மண்டியிட்டு அமர்ந்த நிலையில் இருந்துள்ளது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த குட்டியானை உயிரிழந்துள்ளது.

இதைத்தொடர்ந்து குட்டி யானையின் உடலை மருத்துவக்குழு உடற்கூறாய்வு மேற்க் கொண்டனர். அப்போது உடல் நலக்குறைவால் உணவு உட்கொள்ளாமல் இருந்த நிலையில் ஆண் குட்டி யானை உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதியிலேயே குட்டியானையின் உடலை குழிதோற்றி புதைக்கப்பட்டது.

Updated On: 9 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?