/* */

திமுகவின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது, மிரட்டுவது போன்ற செயல்களுக்கு அஞ்சமாட்டோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

HIGHLIGHTS

திமுகவின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
X

எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து கையில் பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எஸ்.பி.வேலுமணி, ஆட்சியில் அமர்ந்ததும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு அறிவித்தார்கள். ஆனால் எதையும் செயல்படுத்த வில்லை. நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பது, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மேகதாதுவில் அணை கட்டிவதை தடுப்பது போன்ற எதையும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை. எதைப்பற்றியும் கவலைப்படாத அரசாக இந்த அரசு இருக்கின்றது.

கொரொனா தொற்று தடுப்பில் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை எனவும், திமுக அரசு வந்த வேலுமணி ஒவ்வொரு ஊரிலும் 50 முதல் 60 பேர் இறந்திருக்கின்றனர். டெல்லியில் பிரதமரை சந்தித்து தடுப்பூசி வழங்க வேண்டும் எதிர்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் கோரிக்கை விடுத்தனர்.

இது போன்ற செயல்களை செய்யாமல் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது, காவல் துறை மூலம் மிரட்டுவது போன்ற செயல்களில் இந்த அரசு ஈடுபடுகின்றது. காவல் துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். காவல்துறை மிரட்டலுக்கு அதிமுகவினர் அஞ்ச மாட்டோம். நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து இருக்கின்றார்கள். கையாலாகாத அரசாக இந்த அரசு இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

பின்னர் அவர், கொரோனா இறப்பை இந்த அரசு குறைத்து காட்டுவதாகவும், இவ்வளவு இறப்பிற்கு காரணம் இந்த அரசு. அதிமுக ஆட்சியில் மோசமாக இருந்த ஊரக சாலைகளை புதுப்பிக்க போடப்பட்டு இருந்த சாலை டெண்டர்கள் ரத்து செய்து இருப்பதை கண்டிப்பதாகவும், காவல் துறை நடுநிலமையுடன் செயல் பட வேண்டும் அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 28 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்