/* */

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்மேற்கு பருவமழை தீவிரம்:  கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
X

வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் கோவை குற்றாலம் அருவி.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய கோவை திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணபட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நொய்யல் நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் சூழல் சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நொய்யலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை பகுதி மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

Updated On: 15 Jun 2021 2:17 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்