கோவை கமலாம்பாள் இட்லி பாட்டிக்கு இலவச நிலம் தந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி

கோவை கமலாம்பாள் இட்லி பாட்டிக்கு இலவச நிலம் தந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி

நிலம் வழங்கிய எஸ்.பி. வேலுமணி

கோவை கமலாம்பாள் இட்லி பாட்டிக்கு இலவச நிலம் தந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவி செய்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள். 90 வயதான இவர், பல வருடங்களாக அப்பகுதியில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்து வருவதால், கமலாத்தாள் இட்லி பாட்டி என அழைக்கப்படுகிறார்.

இது குறித்த செய்திகள் வெளியானதன் காரணமாக, கமலாத்தாள் இட்லி பாட்டி என பிரபலம் அடைந்தார். மேலும் அவரது நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக பல்வேறு தரப்பினரும் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்று இட்லி பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் கமலாத்தாள் பாட்டியின் சேவையை பாராட்டும் வகையில், அவரது வீட்டின் அருகில் இரண்டு செண்ட் நிலம் வாங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதனை கமலாத்தாள் பெயருக்கு பத்திரபதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து இடத்தின் பத்திரத்தை பாட்டி கமலாத்தாவிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒப்படைத்தார். அவருக்கு கமலாத்தாள் பாட்டி நன்றி தெரிவித்தார். இட்லி பாட்டிக்கு எஸ்.பி. வேலுமணி நிலம் வழங்கியதற்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
Similar Posts
தொண்டர்கள் உழைப்பில் பிழைக்கும் கருணாநிதி குடும்பம்: தமிழிசை சவுந்தர்ராஜன்
தொழிலாளி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை அகற்றிய அரசு மருத்துவர்கள்
தமிழக கவர்னரை கண்டித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை கமலாம்பாள் இட்லி பாட்டிக்கு இலவச நிலம் தந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி
உரிமம் இல்லாத ரிசார்ட்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன்
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவது குறித்து திருமாவளவன் பரபரப்பு பேட்டி
பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவர் கைது: 8 சவரன் தங்க நகை, கார் பறிமுதல்
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
திமுக வில் போதை அணி உருவாகலாம் : எச். ராஜா கிண்டல்
பிறவி இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: கேரள எல்லை பகுதியில்  கண்காணிப்பு தீவிரம்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில்  ஆர்ப்பாட்டம்
கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம்