/* */

கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை

கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் தர்ப்பணம்  செய்ய தடை
X

ஆற்றங்கரையில் வழிபாடு நடத்தியவர்கள்

கோவையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய கோயில்களில் தரிசனம் செய்ய கோவை மாவட்ட ஆட்சியாளர் தடை விதித்துள்ளார்.

ஆடி 18 பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் தரிசனம் செய்து பின்னர் படித்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு வருடம்தோறும் நடைபெறும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நொய்யல் ஆறு பேரூர் படித்துறைக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதனால் தர்ப்பணம் மண்டபம் மற்றும் நொய்யல் ஆற்றங்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் நொய்யல் ஆற்று பாலத்தில் நின்று வழிபாடு செய்து செல்கின்றனர். தடையை மீறி வரும் பக்தர்களை காவல்துறையினர் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Updated On: 3 Aug 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்