/* */

ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடம்: உயர்நீதிமன்ற நீதிபதி

ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கோவையில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கூறினார்

HIGHLIGHTS

ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடம்: உயர்நீதிமன்ற நீதிபதி
X

புதிய நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் 

வணிக வழக்குகளை விசாரிக்க கோவை காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி சமூகநலக்கூடத்தில் வணிக நீதிமன்றம் அமைக்கப் பட்டு உள்ளது. இதேபோல் கோவை மாவட்டம் அன்னூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர். நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய நீதிமன்றங்களின் திறப்பு விழா நடைபெற்றது. புதிய நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

கமர்சியல் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் நடந்த வழக்கு விசாரணைகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தமிழ்நாடு நீதித்துறை பயிலரங்க அகாடமியில் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் வரவேற்றார்.

இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா கலந்து கொண்டு பேசுகையில், கடந்த 2015-ம் ஆண்டில் கொண்டு வந்த வணிக வழக்குகள் சட்டம் புரட்சிகரமான சட்டம். வணிக வழக்குகள் சட்டத்தில் உள்ள 23 பிரிவுகள் நாட்டின் பொருளாதாரத்தை துடிப்பானதாக ஆக்கவே கொண்டு வரப்பட்டன.

புதிய கமர்சியல் நீதிமன்றத்தில் 6 மாதங்களுக்குள் வழக்குகளுக்கு தீர்வுக்காண முடியும். இந்த நீதிமன்ற நடைமுறை விரைவில் மற்ற வழக்குகளை விசாரிக்கும் சிவில் நீதிமன்றங்களில் பின்பற்றப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

வணிக வழக்குகள் முதலில் சமரச முறையில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அங்கு தீர்வுக்காணப்படாத பட்சத்திலேயே நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வணிக நீதிமன்றங்கள் உதவும். இந்திய சட்டத்துறை விரைவில் அனைவராலும் பாராட்டப்படக் கூடியதாக இருக்கும்.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 2 ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் 63 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட் டது. இதில் தமிழகத்தில் 14 லட்சம் வழக்குகளுக்க தீர்வு காணப் பட்டன. அதாவது 21 சதவீத வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதால் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்தது.

கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இல்லாத நிலையை கொண்டு வந்தோம். தற்போது 2 முதல் 3 ஆண்டுகள் பதிவான வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன என்று கூறினார்

Updated On: 14 March 2023 6:02 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்