/* */

நூற்பாலையில் தீ விபத்து - இயந்திரங்கள், நூல்கள் நாசம்

நூற்பாலையில் தீ விபத்து - இயந்திரங்கள், நூல்கள் நாசம்
X

கோயமுத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள்,நூல்கள் எரிந்து நாசமானது.

கோயமுத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் வையாபுரியப்பன். இவர் அப்பகுதியில் நூற்பாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி பற்றி எரிய துவங்கியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் நூல்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 April 2021 6:15 AM GMT

Related News