/* */

வடமாநிலத்தவர்கள் இடையே மோதல்: 10 பேர் படுகாயம்

நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

வடமாநிலத்தவர்கள் இடையே மோதல்: 10 பேர் படுகாயம்
X

மோதலில் காயமடைந்த இளைஞர்கள்.

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான பஞ்சாலை இயங்கி வருகிறது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்டோர்கள் தங்கி பணி புரிந்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்றிரவு பணி நேரத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறி உள்ளது .

இதனை அடுத்து விடுதியில் தங்கியிருந்த இரு மாநிலத்தை சேர்ந்த நபர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து நிர்வாகத்தினர் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பவத்திற்கு காரணமான இரு நபர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 24 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்