/* */

கோவை- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளை

கோவையில், டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டு, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

கோவை- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளை
X

கோவை சூலூர் அருகே, டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு, மர்ம நபர்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். 

கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் கிராமம் உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடை, ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றை, அடையாளம் தெரியாத நபர்கள், கடப்பாறையால் இடித்து துளையிட்டுள்ளனர். பின்னர் உள்ளே சென்று மதுபான பாட்டில்களை திருடி உள்ளனர்.

இன்று காலை, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடை உடைக்கப்பட்டு இருப்பதை, சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கடை ஊழியருக்கு தெரியப்படுத்தினர்.

கடை ஊழியர்கள் வந்து கடையை திறந்து பார்த்தபோது, 96 பீர் பாட்டில்கள் மற்றும் 800 குவாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட மதுபானங்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ஒன்றரை லட்சத்திற்கும் மேல் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 3 Jun 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்