/* */

பயணிகளுக்கு உதவ கோவை விமான நிலையத்தில் ரோபோக்கள் அறிமுகம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

HIGHLIGHTS

பயணிகளுக்கு உதவ கோவை விமான நிலையத்தில் ரோபோக்கள் அறிமுகம்
X

பயணிகளுக்கு உதவ கோவை விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரோபோ.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கோவையில் இருந்து தினமும் 20-க்கு மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவ தனி உதவி மையம் விமான நிலையத்திலேயே உள்ளது. அந்த உதவி மையத்தை செல்போன் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை பயணிகள் பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற இயலும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய விமான நிலைய அதிகாரி கூறும் போது, கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும் என்றும் இந்த ரோபா யாரின் உதவியும் இன்றி தானாக நகரும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்தனர்.

மேலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்று, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும் எனவும் இதற்காக ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கும் என்றும் இந்த ரோபோக்கள் பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு தெரிவிக்கும் என கூறினார்.

Updated On: 9 Jun 2022 4:05 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  2. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  4. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  6. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  8. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  9. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  10. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை