/* */

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது காவல் நிலையத்தில் புகார்

கலெக்டரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது காவல் நிலையத்தில் புகார்
X

காவல் நிலையத்தில் திமுக புகார்

கோவையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் சமீரனை, ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். மனுவினை பெறும் போது, மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்று வாங்கவில்லை எனக்கூறி, மனு கொடுக்கச் சென்ற அதிமுகவினர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்தனர். இது தொலைக்காட்சிகளில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சூலூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், இன்று சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன் தலைமையில் அளித்த மனுவில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Updated On: 30 July 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...