கோவை அருகே பையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை - காவல் துறையினர் விசாரணை

கோவை அருகே பையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை - காவல் துறையினர் விசாரணை
X
கைப்பையை திறந்து பார்த்தபோது, அதில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கருமத்தம்பட்டி அருகே தென்னம்பாளையம் உள்ளது. இங்குள்ள சர்வீஸ் சாலையில் கேட்பாரற்று ஒரு கை பை கிடந்துள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture