/* */

கோவை - மதுரை விரைவு ரயில் வேகம் அதிகரிப்பு

கோவை - மதுரை விரைவு ரயில் இயக்கப்படும் வேகம் 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது .

HIGHLIGHTS

Pollachi Railway News
X

Pollachi Railway News

கோவை - மதுரை விரைவு ரயில் இயக்கப்படும் வேகம் 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது .

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கோவை - பொள்ளாச்சி- பழநி - திண்டுக்கல் வழித்தடத்தில் பயணிகள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் வேகத்தை அதிகரிக்குமாறு, பயணிகள் தரப்பில் தொடா்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கை காரணமாக, ரயிலின் வேகம் திண்டுக்கல் - பழநி இடையே மணிக்கு 75 கி மீ வேகத்தில் இருந்து 100 கிமீயாகவும் பழநி - பொள்ளாச்சி இடையே மணிக்கு 70 கிமீ வேகத்தில் இருந்து 100 கிமீ யாகவும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, முன்பு மதுரையில் தினமும் காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 12.45 மணிக்கு கோவையைச் சென்றடையும்

மதுரை - கோவை விரைவு ரயில் (எண்:16722), மதுரையில் தற்போது காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு 30 நிமிடங்கள் முன்பாகவே பிற்பகல் 12.15 மணிக்கு கோவை நிலையத்தைச் சென்றடையும்.

அதேபோல, கோவையில் பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரைக்குச் சென்றடையும்

கோவை - மதுரை விரைவு ரயில் (எண்: 16721), கோவையில் இருந்து 35 நிமிடங்கள் தாமதமாக 2.40 மணிக்குப் புறப்பட்டு வழக்கமாகச் சென்றடையும் 7.35 மணிக்கு மதுரையைச் சென்றடையும்.

இந்த ரயில் வழக்கமாக நின்று செல்லும் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழநி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், அம்பத்துரை, கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூா், கூடல் நகா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மங்களூரு விரைவு ரயில் ( எண்:16159) டிசம்பா் 24 ஆம் தேதி முதல் ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடன் இயக்கப்படும்.

காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 16187) ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடனும், மங்களூரு - கோவை விரைவு ரயில் (எண்: 16324) இரு இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடனும் டிசம்பா் 25 ஆம் தேதி முதல் இயக்கப்படும்.

மங்களூரு - சென்னை விரைவு ரயில் (எண்: 16160) ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடனும், கோவை - மங்களூரு விரைவு ரயில் (எண்: 16323) இரு இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடனும் டிசம்பா் 26 ஆம் தேதி முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Dec 2022 4:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  3. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  6. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!