/* */

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: காவல்துறைக்கு தொழில்துறை பாராட்டு

கோவையில் சிக்னல்களை அகற்றி, 'யூ டர்ன்' அமைத்து, போக்குவரத்து சிக்கலை எளிமையான முறையில் தீர்த்து வைத்த காவல்துறையினருக்கு தொழில்துறையினர் பாராட்டு விழா நடத்தினர்.

HIGHLIGHTS

போக்குவரத்து  நெரிசலுக்கு தீர்வு: காவல்துறைக்கு தொழில்துறை பாராட்டு
X

கோவை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சிக்னல்களை அகற்றி, 'யூ டேர்ன்' அமைக்கப்பட்டன. முதலில் சற்று சிரமமாக இருந்தாலும் பழகப் பழக எளிதாக மாறியது 'யூ டர்ன்' முறை.

சிக்னல்களில் காத்திருக்கும் நேரம், சிக்கித் தவிக்கும் ஆம்புலன்ஸ்கள், விரயமாகும் எரிபொருள், வெளியாகும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, சிக்னல்களை இயக்க ஒவ்வொரு சிக்னலிலும் போலீசார் என, பல்வேறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக, 'யூ டர்ன்' அமைந்தது.

விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதற்கு காரணமான காவல்துறையினர் , போக்குவரத்து துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் அனைவருக்கும் தொழில் அமைப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

இவ்விழாவில், கொடிசியா தலைவர் திருஞானம், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் துரைராஜ், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் பிரசாத், சீமா தலைவர் விக்னேஷ் பங்கேற்றனர்.

கோவை மாநகர காவல் துணை ஆணையராக இருந்த மதிவாணன், நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலுவலர் மனுநீதியுடன் இணைந்து சிக்னல்கள் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள், தீர்வு கண்ட வழிமுறைகளை விளக்கினர்.

காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''பொதுவாகவே காவல்துறை அதிகாரிகள், எதையும் அப்படியே பின்பற்ற வேண்டும், மாற்றம் செய்யக்கூடாது' என்ற மனப்பான்மையில் தான் செயல்படுவர். எதையாவது மாற்றி, அதனால் வரும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற அச்சம் இருக்கும். அந்த அச்ச உணர்வை விட்டு, வரும் விளைவுகளை எதிர் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டுடன், இந்த போக்குவரத்து மாற்றம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

னிகழ்ச்சியில் தொழில் துறையினர் கூறுகையில், 'யூ டர்ன்' அமைந்துள்ள இடங்களில், அதிக இட வசதி வேண்டும். விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, நிவர்த்தி செய்ய வேண்டுமே ஒழிய, பாதையை மூடக்கூடாது. பாதசாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மதுக்கரை மரப்பாலம் பகுதியில் நெரிசலை குறைக்க நடவடிக்கை வேண்டும். நீலாம்பூரில் பைபாஸ் பிரியும் இடத்தில் உள்ள சிக்கலை தீர்க்க வேண்டும். எல் அண்ட் டி பைபாஸ் விரிவுபடுத்த, அரசிடம் பரிந்துரைக்க வேண்டும்.n வடகோவை மேம்பாலம் அருகில், அவிநாசிலிங்கம் பல்கலை சிக்னலில் உள்ள நெரிசலை குறைக்க வேண்டும். ஜேசிபி கல்லூரி அருகில், யு டர்ன் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட யோசனைகளை முன் வைத்தனர்.இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உறுதி அளித்தார்.

Updated On: 29 Jan 2024 9:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை