மேற்கூரை இடிந்து விழுந்து பெண்ணிற்கு லேசான காயம் : அதிர்ஷ்டவசமாக தப்பினார்

மேற்கூரை இடிந்து விழுந்து பெண்ணிற்கு லேசான காயம் : அதிர்ஷ்டவசமாக தப்பினார்
X

கூரை இடிந்து விழுந்ததில் சிதறிக்கிடக்கும் கட்டுமான பொருட்கள்.

கோவையில் வீட்டுவசதி வாரிய பழைய கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண்ணிற்கு லேசான காயம் ஏற்பட்டது.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு பின்புறம் தமிழக அரசுக்குச் சொந்தமான குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மொத்தம் 960 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிய காரணத்தினால் உறுதி தன்மையற்று காணப்படுகிறது.

மேலும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டு பிளாக்குகள் முற்றிலும் மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறிவிட்டது. இதனால், அங்கு வசித்து வந்த பல பேர் தற்காலிகமாக இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மழையால் இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள 564 எண் கொண்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அங்கு வசித்து வந்த சுப்புலட்சுமி மாடி இடிந்து கீழே விழும்போது மாடிக்கு சென்றார். அப்போது கூரை இடிந்து விழுந்ததால் அவரும் சேர்ந்து விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வீட்டுவசதி துறை அமைச்சராக உள்ள முத்துச்சாமி சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதிக்கு வருகை தந்து அனைவரையும் தற்காலிகமாக வேறு பகுதிக்கு செல்லுமாறும் அவர்களின் வீட்டு வாடகையை அரசே செலுத்தும் என்றும் கூறியிருந்தார். மேலும் அங்கு உள்ள இடங்களை பிடித்து அப்புறப்படுத்திவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாகவும் உறுதி கூறியிருந்தார். இந்த நிலையில் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அரசின் பேச்சை கேட்காமல் அங்கேயே வசித்து வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
கோவையில் புதிய  தகவல் தொழில்நுட்ப கட்டிடம் : முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
கோவை மாவட்டம் அன்னூரில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த 3 வயது குழந்தை
வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம் உட்பட மூன்று படங்கள் நடிக்கிறேன் : நடிகர் கவின்
சூப்பர் பவர் உள்ளதாக கூறி விடுதி மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்
கோவை மாவட்ட பலகார கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
கோவையில் நடைபெற்ற ரோஸ்கர் மேளா நிகழ்ச்சியில் 191 பேருக்கு பணி நியமன ஆணை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வீரகேரளம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம்!
21999க்கே இவ்ளோ அம்சங்களா? 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. SONY சென்சார்.. 5500mAh பேட்டரி! எப்படி சாத்தியம்?
தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து தீவிர விசாரணை : போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
கோவை பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: திருமாவளவனுக்கு அதியமான் கேள்வி