/* */

யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்று அசத்தியுள்ளார்.

HIGHLIGHTS

யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்
X

ரஞ்சித்.

கோவை ஹோப்காலேஜ் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் - அமிர்தவள்ளி தம்பதியினர். இவர்களது இரண்டாவது மகன் ரஞ்சித் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி. இவர் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதியிருந்தார். இந்த தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்று அசத்தியுள்ளார்.

கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த போது காம்பஸ் இன்டர்வியூவில் செவித் திறன் குறைபாட்டை காரணம் காட்டி நிராகரித்தாகவும், தன்னுடைய திறமையை நிருபிக்க தொடர்ந்து முயன்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைவாக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும், மாற்று திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் எனவும் ரஞ்சித் தெரிவித்தார். குடிமைப் பணி தேர்வில் வென்ற ரஞ்சித்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல பல்வேறு தரப்பினரும் ரஞ்சித்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 25 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!