கோவையில் புதிதாக 188 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் உயிரிழப்பு

கோவையில் புதிதாக 188 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை.

கோவையில் நேற்றைவிட இன்று 21 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்புகள், மீண்டும் குறைந்து வருகிறது. கோவையில் நேற்றைவிட இன்று 21 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 188 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 903 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2042 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 598 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2263 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
ai solutions for small business