/* */

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று: கோவை மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் சாமிநாதனுக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

HIGHLIGHTS

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று: கோவை மருத்துவமனையில் அனுமதி
X

அமைச்சர் சாமிநாதன்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், செய்தித்துறை அமைச்சராகவும் மு.பெ.சாமிநாதன் பதவி வகித்து வருகிறார். கடந்த வாரத்தில் அமைச்சர் சாமிநாதன் சென்னை மற்றும் திருப்பூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் அமைச்சர் சாமிநாதனுக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனிடையே கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமைச்சர் சாமிநாதன் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.