கோவையில் இன்று புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; உயிரிழப்பு இல்லை

கோவையில் இன்று புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; உயிரிழப்பு இல்லை
X

கொரோனா பரிசோதனை பைல் படம்.

கோவையில் நேற்றைய கொரோனா தொற்று எண்ணிக்கைை விட இன்று ஒருவருக்கு குறைவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த மூன்று நாட்களாக தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 230 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2091 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 247 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 156 பேராக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2257 ஆக உள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?