/* */

மக்களின் உரிமைகளை மோடி விற்கிறார் - ராகுல்காந்தி

மக்களின் உரிமைகளை மோடி விற்கிறார் - ராகுல்காந்தி
X

தமிழக மக்களின் உரிமைகளை பிரதமர் மோடி விற்பனை செய்கிறார் என கோவையில் ராகுல்காந்தி கூறினார்.

தமிழ்நாட்டில் 3 நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனிவிமானம் மூலம் டெல்லியில் இருந்து கோவைக்கு வருகை தந்தார். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்கிறார். கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல்காந்தி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து சித்ரா பகுதியில் ராகுல்காந்தி பொதுமக்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி. ஒரே நாடு, ஒரே மொழி என ஒரே விதமான செயல்பாடுகளை கொண்டு வர முயல்கின்றனர். பிரதமர் மோடி தமிழ்மொழி ,கலாச்சாரம் போன்றவற்றை இரண்டாவதாக கருதுகிறார். இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரம், வாழ்க்கை முறை இருப்பதை நாங்கள் நம்புகின்றோம். பல்வேறு மொழிகளுக்கு சமமான உரிமை இருப்பதாக உறுதியாக நம்புகின்றோம். காங்கிரஸ் கட்சிக்கும், மோடிக்கும் உள்ள வேறுபாடு இதுதான். பிரதமர் மோடி தனது தொழிலதிபர் நண்பர்களுக்காக செயல்படுகின்றார். தமிழக மக்களின் உரிமைகளை மோடி விற்பனை செய்கிறார் என அவர் தெரிவித்தார்.

Updated On: 23 Jan 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...