/* */

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகே திடீர் சாலை பணி: போக்குவரத்து பாதிப்பு

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலை அடைக்கப்பட்டதால் அனைத்து பேருந்துகளும் மேம்பாலத்தில் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி

HIGHLIGHTS

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகே திடீர் சாலை பணி: போக்குவரத்து பாதிப்பு
X

முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 

கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் புதிய பேருந்துநிலையம் அருகே தார் சாலை போடும் பணிகள் திடீரென தொடங்கியது.

இதன்காரணமாக கிணத்துக்கடவு-அரசம்பாளையம் பிரிவு அருகே தடுப்பு அமைக்கப்பட்டு, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் காலை நேரத்தில் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஆகியோர் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் அரசம்பாளையம் பிரிவில் இருந்து, சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று கிணத்துக்கடவு பேருந்து நிலையம் செல்ல வேண்டி உள்ளது. அதேபோல பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரும் பயணிகள் முத்தூர் பிரிவில் இறங்கி அங்கிருந்து நடந்துபேருந்து நிலையம் வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கிணத்துக்கடவு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி திடீரென நடைபெற்றதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் மேம்பாலத்தின்கீழ் டிவைடர் வைத்து உள்ளதால், வாகன ஓட்டிகள் மீண்டும் ஒரு வழிப்பாதையில் திரும்ப வேண்டியுள்ளது. எனவே இந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், காலைநேரத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடை பெற்றதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலை அடைக்கப்பட்டதால் அனைத்து பேருந்துகளும் மேம்பாலத்தின் மேல் சென்றது.

எனவே பேருந்துசுக்காக காத்திருந்த நாங்கள் அனைவரும் திரும்பவும் அரசம்பாளையம் பிரிவு சென்று, அங்கிருந்து மேம்பாலத்தின் வழியாக செல்லும் பேருந்துகளை மறித்து ஏற வேண்டி இருந்தது. எனவே பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் தார்சாலை அமைக்கும் பணியை செய்து முடிக்க வேண்டும்என்று கூறினர்.

Updated On: 9 Dec 2023 2:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  2. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  3. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  5. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  6. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  7. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  8. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  10. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...