/* */

கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா பதவியேற்பு

கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா பதவியேற்பு
X

கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா, இன்று பதவியேற்றார்.

கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த குமாரவேல் பாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளராக இருந்த ராஜகோபால் சுங்கரா, கோவைக்கு நியமிக்கப்பட்டார். இதையடுத்து கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ராஜகோபால் சுங்கரா ஆணையாளராக பதவியேற்றுக் கொண்டார். இவர், பத்மநாதபுரத்தில் உதவி ஆட்சியராகவும், கடலூரில் கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றி அனுபவம் கொண்டவர்.

பதவி ஏற்ற பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜகோபால் சுங்கரா, கோவை மாநகராட்சி தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மாநகராட்சி. இங்கு நாளொன்றுக்கு 500 கொரோனா பாதிப்புகள் ஏற்படுகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

கோவிட் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதனை சமாளிக்க, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்படும். மக்கள் குறைதீர்ப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, முன்னுரிமை அளிக்கப்படும். சென்னையை போல கோவை மாநகராட்சியை முகநூல், டிவிட்டர், போன் நம்பர் மூலம் எளிதில் தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 14 Jun 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...